சேலம் மாநகராட்சி காலிமனைப் பகுதிகளில் பிளாஸ்டிக்கழிவுகள் கொட்டப்பட்டால் கடும் நடவடிக்கை
சேலம் மாநகராட்சியை குப்பையில்லா மாநகரமாக மாற்றும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, நடைபயிற்சியின் போது மாநகரப் பகுதிகளில் நடைபாதை குப்பைகளை சேகரித்து அகற்றும் சேலம் பிளாகிங் (ளுயடநஅ ஞடடிபபiபே) குடியிருப்போர் நலச்சங்கங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒத்துழைப்புடன் சேலம் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.

சேலம் மாநகராட்சி காலிமனைப் பகுதிகளில் பிளாஸ்டிக்கழிவுகள் கொட்டப்பட்டால் கடும் நடவடிக்கை- மாநகராட்சி ஆணையாளர் திரு. ந. இரவிச்சந்திரன் அவர்கள்.
சேலம் மாநகராட்சியை குப்பையில்லா மாநகரமாக மாற்றும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, நடைபயிற்சியின் போது மாநகரப் பகுதிகளில் நடைபாதை குப்பைகளை சேகரித்து அகற்றும் சேலம் பிளாகிங் (ளுயடநஅ ஞடடிபபiபே) குடியிருப்போர் நலச்சங்கங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒத்துழைப்புடன் சேலம் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.
இன்று 06.02.2021 சூரமங்கலம் மண்டலத்தில், டாக்டர் காலனி,சாஸ்திரி நகர், சுந்தரம் காலனி; அஸ்தம்பட்டி மண்டலத்தில் அத்வைத ஆசிரமம் ரோடு, சின்னத்திருப்பதி ரோடு, அடைக்கல நகர், எழில் நகர்; அம்மாபேட்டை மண்டலத்தில் பழைய பிள்ளையார் கோவில் தெரு, விவேகானந்தர் தெரு, கொய்யா தோப்பு, மன்னார்பாலையம் பிரிவு சாலை, தாதம்பட்டி ரோடு, பாரதியார் தெரு, வ.உ.சி நகர், ஆறுமுக நகர்; கொண்டலாம்பட்டி மண்டலத்தில் ஆர்.ஆர். பேர்லாண்ட்ஸ், மேட்டு வள்ளலார் தெரு, அன்னதானப்பட்டி காவலர் குடியிருப்பு, சங்ககிரி மெயின் ரோடு, ராஜிவ்காந்தி தெரு, வடக்கு தெரு ஆகிய இடங்களில் சேலம் பிளாகிங் நடைபெற்றது.
இப்பணியில், குடியிருப்போர் நலச்சங்கங்கள், ரோட்டராக்ட் மற்றும் ரோட்டரி சங்கத்தினர், சண்முகா மருத்துவமனை செவிலியர் கல்லூரி மாணவர்கள் உட்பட 575 தன்னார்வலர்கள் மூலம் 715 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது.
அஸ்தம்பட்டி மண்டலம், சின்னத்திருப்பதி அபிராமி கார்டன் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் சேலம் பிளாகிங் (ளுயடநஅ ஞடடிபபiபே) பணி நடைபெற்றது. சுற்றுப்புறத்தை சுகாதாரமாக பராமரித்தல், வீட்டு குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பைகளாக தரம் பிரித்தல், மழை நீர் சேமிப்பு உருவாக்குதல், தடை செய்யப்பட்ட நெகிழிகளை பயன்படுத்தாமல் இருத்தல், வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் உருவாக்குதல், மழைநீர் சேமிப்புத் திட்டம் குறித்த விழிப்புணர்வு பணியை மேற்கொண்ட ஆணையாளர் அவர்கள், விழிப்புணர்வு கேள்விகளுக்கு சரியான பதில்களை கூறிய பொதுமக்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
சேலம் பிளாகிங் பணியின் போது காலிமனை பிரிவுகளில் அதிக அளவில் நெகிழிகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதை கண்டறிந்த ஆணையாளர் அவர்கள், காலிமனைகளில் கழிவுகளை கொட்டிய, மனையை ஒட்டியுள்ள குடியிருப்புகளுக்கு அபராதம் விதிக்க அறிவுறித்தினார். மேலும் காலிமனைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீதும், உரிமையார்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
நம்மை அடையாளம் காட்டும் சேலம் மாநகராட்சி பகுதியினை தூய்மையாக, சுகாதாரமாக பராமரிப்பது நமது கடமை என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து, மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மையாக பராமரிப்பதில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஆணையாளர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் திரு. எம் ஜி. சரவணன், உதவி செயற்பொறியாளர்கள் பொறி.எம்.ஆர். சிபிசக்கரவர்த்தி, பொறி. வி. திலகா, சுகாதார அலுவலர் திரு.ஆர். ரவிச்சந்தர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.